Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
!-end>!-local>
Tamil HD Video Songs
!-end>!-local>
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
!-end>!-currency>
Kavalan vijay&asin
இணையதளங்கள்
!-end>!-currency>
Thiruvilayadal DVD Movie
கிழங்குகளும் அதன் குணங்களும்
மண்ணுக்கு அடியில் விளைகின்றன கிழங்குகள்.
உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, காரட் கிழங்கு (மஞ்சள் முள்ளங்கி), வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட் ஆகிய கிழங்குகள் அதிகம் பயன்படுத்தப்படும் கிழங்குகளாகும்.
இஞ்சி:
இதனை தனியாக சமைத்து உண்பது கிடையாது. ஆனால் சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றும்.
இஞ்சி, பசியை உண்டாக்கிறது. தீனிப்பைக்குப் பலம் சேர்க்கும். அஜீரணத்தைப் போக்கும். கபத்தை அறுக்கும். ஈரலில் உள்ள கட்டுகளையும் அறுக்கும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியையும் நிறுத்தும் தன்மை கொண்டது.
உருளைக் கிழங்கு:
அமெரிக்க கண்டத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியது உருளைக்கிழங்கு. நமது நாட்டில் குளிர் பிரதேசங்களில் இது பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.
உருளைக்கிழங்கின் தோலின் அடியில் இரும்புச்சத்து உண்டு. எனவே இதனை தோலுடன் வேகவைத்து பிறகுதான் தோலை உரிக்க வேண்டும். உடல் எடை கூடும். வாயுவை உண்டாக்கும் கிழங்கு இது. ஆகவே, இஞ்சி, புதினா, எலுமிச்சம் போன்ற ஏதாவது ஒன்றைச் சேர்த்துச் சமைப்பது நல்லது.
கருணைக் கிழங்கு:
இதனைக் காறாக்கருணை என்றும் சேனைக்கிழங்கு என்றும் கூறுவார்கள். தேரையர் தனது நோயணுகா விதியில், 'மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்' என்று இதனைக் குறிப்பிடுகிறார்.
கருணைக் கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் நீங்கும். பசி உண்டாகும். இரைப்பைக்கு பலம் சேர்க்கும். கருணைக் கிழங்கை சமைக்கும் போது சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நமநமப்புத் தன்மை நீங்கும்.
கேரட் கிழங்கு:
மஞ்சள் முள்ளங்கிதான் கேரட் என்று அழைக்கப்படுகிறது. அயல்நாட்டு காய்கறி வகையைச் சேர்ந்தது இது. நமது நாட்டின் குளிர் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இதில் ஏ, பி, சி விட்டமின்கள் உள்ளது.
பச்சையாக உண்ணும் போதும் சுவையுடனும் இருக்கும். பாஸ்பரஸ், கால்ஸியம் போன்றவையும் இதில் அடங்கியுள்ளது. இரத்தத்தை வளப்படுத்தும், இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நலம் தரும். கேரட்டில் அல்வா செய்தால் அதன் சுவையே தனிதான்.
பீட்ரூட்:
இதுவும் அயல்நாட்டுக் கிழங்குதான். நம் நாட்டில் இதுவும் குளிர்ப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. ஐரோப்பியர்கள் இதிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள்.
உண்பதற்கு இதுவும் இனிப்பாக இருக்கும். இருந்தாலும் கேரட்டை உண்பதைப் போல இதனை விரும்பி உண்பவர்கள் குறைவு. பி, சி விட்டமின்கள் இதில் உள்ளன.
முள்ளங்கி:
குடல் வாதம், நீர்க்கோவை, காசம் ஆகியவை நீங்கும். பசியை உண்டாக்கும். தொண்டைக் கம்மல், மூலரோகம், கல்லடைப்பு போன்றவைகளையும் போக்கும். உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
வள்ளிக்கிழங்கு:
வள்ளிக்கிழங்கில் வெளிறிய மஞ்சள், சிவப்பு எனும் இரண்டு வகைகள் உண்டு. இதைச் சர்க்கரை வள்ளி என்றும் கூறுவர். இரத்தத்தைப் பெருக்கும். மூளைக்குப் பலம் தரும். அதிகம் உண்டால் மந்தப்படுத்தும். வாயுவை உண்டாக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
!-end>!-currency>
Cake Orders
!-end>!-weather>
Thanus
!-end>!-my>