Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Blog Archive
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
காரில் கியர் மாற்றுவது எப்படி?(Tips)
இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும்.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும்.
இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள்.
தவிர, வளைவுகளில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது.
தவிர, கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும்.
தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும்.
ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும்.
பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு
கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
சாதரணமாக அந்த கோப்புகளை ஓபன் செய்தால் போட்டோ மட்டுமே தெரியும். அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் கோப்புகள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள கோப்புகளை பார்க்க முடியும்.
1. இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகளை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து கீழே உள்ள தரவிறக்க சுட்டியை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
3. இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கம் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.
4. அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
5. அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg கோப்பை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே கோப்பை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
7. இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
8. அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுடைய கோப்புகள் மறைக்கப்பட்டது என செய்தி வரும். அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் கோப்பை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
9. வெறும் படம் மட்டுமே தெரியும். பின்னால் இருக்கும் நம் கோப்புகள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் கோப்புகள் தெரியும். அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
10. இது போல் நம் கோப்புகளை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளலாம்.
ஆரோக்கியம் வேண்டுமா? சர்க்கரை வேண்டாம்
பூமியை சூரியன் விழுங்கி விடுமா?
தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை! _
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உடைய முதியவர்களின் ஆயுள் அதிகம்
குறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் அவர்களது ஆயுட் காலத்தை நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழுப்பு சத்துடைய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதனால் அதிக உயிராபத்து ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐஸ் கிறீம், முட்டை, இறைச்சி வகைகள், பால், சீஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வோர் விரைவில் உயிரிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.