Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
உள்ளங்கையில் உலகம் - கைப்பேசியில் இணையம்
.jpg)
தொழில்நுட்பம் வளர வளர, நம் "தேவை"களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் "வசதி உள்ளவர்கள்" வாங்கும் பொருட்களாக இல்லாமல், " அத்யாவசியம்" என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் 'நாம் வாழும் இந்த' காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் – கைப்பேசியும் இல்லாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்டால், நாம் அதாவது தனிநபரான நீங்களும் நானும் அந்த வட்டத்துக்குள் இல்லை என்ற எண்ணம் தான் எழுகிறது.
10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் Necessary Evil என்று சொல்லவது இணையத்தொடர்புக்கு மிகச்சரியாக பொருந்தும். தகவல் பரிமாற்ற துறையில் இருப்பவர்கள் இதன் வீர்யத்தை நன்கு அறிவார்கள். இது ஒரு புறம் இருக்க, இணையத்தொடர்பை நிறுவுவது முன்பை விட இன்று மலிவாகத் தான் உள்ளது. நாளுக்கு நாள் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணமாக்கூட இருக்கலாம்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களில் கணனியும் கைப்பேசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒன்று இல்லை என்றாலும், பல அலுவல்கள் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். இம்மாதிரி நேரங்களில் தான் கைப்பேசியில் இணையதளங்களை பார்வையிடுவதைக் குறித்து பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது நடைமுறைக்கு சரிவருமா? அப்படியானால் 'என் கைப்பேசியில் இதை எவ்வாறு பயன்பாட்டு நிலையில் வைப்பது" போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் இப்பதிவின் நோக்கம்.
கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நாம் ISP என்று சொல்லப்படும் Internet Service Provider களை கண்டறிந்து சந்தா விவரங்களை தெரிந்துகொள்வோம். உதா:- DataOne, BSNL, Sify போன்றவை. பிறகு இவற்றில் நமக்கு உகந்ததை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட ISP அலுவலகத்தில் விண்ணப்பத்தை குடுத்து, சந்தா தொகையையும் கட்டிவிட்டால், சில தினங்களில் கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, "என்னிடம் Wireless Modem உள்ளது. இதை பயன்படுத்திதான் நான் மடிகணனியில் இணையத்தொடர்பு ஏற்படுத்துகிறேன். ஆகவே, இதே wireless modem த்தை பயன்படுத்தி என் கைப்பேசியிலிருது இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா?" என்றால் கண்டிப்பாக முடியாது. Modem தான் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் மூலாதாரம் என்றாலும், கணனி வேறு, கைப்பேசி வேறு. Chalk peice பயன்படுத்தி Slate இல் எழுதலாம், நோட்டுப்புத்தகத்தில் எழுத முடியுமா? நோட்டுபுத்தகத்தில் எழுத பேனா / பென்சில் தான் உகந்தது. கணனியில் பயன்படுத்தும் இணையத்திற்கும், கைப்பேசியில் பயன்படுத்தும் இணையத்திற்கும் இது தான் வித்தியாசம்.
அப்படி என்றால், கைப்பேசியில் எவ்வாறு இணையத்தொடர்பை ஏற்படுத்துவது?. இதற்கான குறிப்புகள் சில.
- Mobile phone model : - நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில, இணைய பயன்பாட்டுக்கான சாதனங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுக்கள். உதா:- கைப்பேசியில் உலாவி / கோப்புகளை படிக்கவும் மற்றும் தரவிறக்கம் – வலையேற்றுவதற்கான வசதி போன்றவை.
- Mobile Service Provider :- நீங்கள் சந்தாதாரராக இருக்கும் Mobile Service Provider (Airtel, Hutch, vodafone) இடம், கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதா என்று விவரமாக கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், நேரில் போய் விசாரிப்பது நல்லது. பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
- சந்தா விவரங்கள் அடுத்தது, இணையத்தொடர்புக்கான தனிப்பட்ட சந்தா விவரங்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். சில Mobile Service providers, மாதம்/ வாரம் / தினத்திற்கென்று ஒரு தொகை வைத்திருப்பார்கள். நீங்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். வேறு சில Mobile Service Providers, பயன்பாட்டுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதும் போன்ற திட்டங்களையும் வைத்திருப்பார்கள். ஆகவே அவசரப்படாமல், நிதானமாக எல்லாவற்றையும் கேட்டு, புரிந்துக கொண்டு உங்களுக்கு சரியாக தோன்றும் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
- Data Download Charges :-
கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்த மாத சந்தா என்ற தொகையை கட்டினாலும், இணையப்பயன்பாட்டில் இருக்கும் பொழுது, உலாவியில் தரவிறக்கப்படும் பக்கங்களின் அளவை சார்ந்திருக்கும் தொகையை தான் Data Download charges என்று சொல்வார்கள்.
உதா:- உங்கள் கைப்பேசியில் இணையத்தொடர்புக்கான மாதச்சந்தா 500/- என்று வைத்துக்கொள்வோம். இணையத்தொடர்பு தான் கிடைத்துவிட்டதே! சும்மா இருக்கும் நேரம் எல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறேன், வலைத்தளங்களை பார்வையிடுகிறேன் என்று தினம் 2-3 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 மணி நேரத்தில், நீங்கள் பார்வையிட்டிருக்கும் பக்கங்களின் அளவை பொறுத்து Data Download Charges என்றொரு தொகை கணக்கிடப்படும். மாத கடைசியில் இணயத்தொடர்பு சந்தா 500/ மற்றும் Data Download Chareges 1000/- என்றும் பில் வரும்.ஆகவே நீங்கள் தேர்வு செய்திருக்கும் Mobile Service provider இடம், அவர்களின் திட்டத்தில் data download charges உண்டா? அப்படி உண்டு என்றால் அதன் விவரங்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் இணையத்திலிருந்து பாட்டு / படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த Data Download Charges கூரையை தொடும் அளவிற்கு இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
இவை அனைத்தையும் மனதில் பதியவைத்து உங்கள் Mobile Service Provider ஐ அணுகி விவரங்கள் சேகரித்து நன்கு ஆராய்ந்த பிறகே கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்பதையே பரிந்துரைக்கிறோம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியும். "கைப்பேசியில் இணையம் தேவை தானா?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும். இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிட துவங்குங்கள், விடை தானாகவே கிடைத்துவிடும்.
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.
தனிநபர் தன்னியக்க போக்குவரத்து ஊர்தி

நவீன உலகிலே ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்குமே எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினையாகும். தனிநபர் போக்குவரத்து வாகனங்களின் சடுதியான அதிகரிப்பே இப் போக்குவரத்து நெரிசலுக்கான பிரதான காரணமாகக் காணப்படுகின்றது.
பொதுவாக, மக்கள் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காகவே தனிப் போக்குவரத்து ஊர்திகளை விரும்புகின்ற போதிலும் தனிப் போக்குவரத்து ஊர்திகளின் அதிகரித்த பாவனை போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கின்றது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எச்சரிக்கும் போக்குவரத்துத்துறை நிபுணர்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக புதிய உத்திகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது பரவலாகப் பயன்பாட்டிலிருக்கும் பொரும்பாலான பொது மற்றும் தனிநபர் போக்குவரத்து ஊர்திகள் யாவும் பொதுவான ஒரே போக்குவரத்துப் பாதைகளையோ அல்லது
ஒன்றுக்கொன்று தொடுகையுறும் போக்குவரத்துக் கடவைகளையோதான் பயன்படுத்துகின்றன. இவ்வாறான காரணங்களால் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து தடை கூட ஏற்படுகின்றது. இவற்றுக்கான தீர்வுகளிளாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் ஏனைய போக்குவரத்துப் பாதைகளுடன் தொடுகையுறாது தனியான போக்குவரத்துப் பாதைகளுடன் உருவாக்கப்படும் PRT என்றழைக்கப்படும் தனிநபர் தன்னியக்கப் போக்குவரத்து ஊர்தி வலையமைப்பாகும்.
இவ்வகை ஊர்திகளின் சிறப்பம்சம் இவை தனியான பிரத்தியேகப் பாதை வலையமைப்பினூடாக இயக்கப்படுவதுடன் ஒருவழிப்பாதையில் பயணிப்பதன் காரணமாக ஏனைய ஊர்திகளின் குறுக்கீடின்றி வேகமாகப் பயணிக்கவல்லன. அதுமட்டுமன்றி இவற்றின் பயன்பாடு பெருமளவான வாகனத் தரிப்பிடத் தேவையை இல்லாது செய்கின்றது. முற்றுமுழுதாக கணனிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வூர்திகள் மின்சக்தியில் இயங்கவல்லன. இவ்வகையான போக்குவரத்து வலையமைப்பிற்கான ஆய்வு முயற்சிகள் 1960 களிலேயே ஆரம்பித்து விட்டன என்ற போதிலும், தொழிநுட்ப முன்னேற்றமின்மை மற்றும் தனியான பாதைகள் அமைப்பதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் பெரும்பாலானோர் மத்தியில் தயக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது காணப்படும் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெர்சலைத் தவிர்ப்பதற்கு அவசியமாகக் தேவைப்படும் மாற்றீடு என்பன இவ்வூர்தி தொடர்பான ஆய்வுகளை மீண்டும் முடுக்கி விட்டுள்ளன.
இவ்வகை ஊர்திகளின் சேவை அடிப்படையில் வாடகை ஊர்திகளின் (Taxi) சேவையினை ஒத்ததாகவே காணப்படுகின்றது. வாடகை ஊர்தி ஒன்று எமக்குத் தேவைப்படும்போது, வாடகை ஊர்திக்கான தரிப்பிடத்திலிருந்தோ அல்லது வாடகை ஊர்தி சேவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டோ நாம் எனக்கான ஊர்தியை அழைக்கின்றோம். இங்கும் அதேபோன்று இத் தன்னியக்க ஊர்திகள் நிறுத்தப்படும் தரிப்பிடத்திலிருந்து அமக்கான ஊர்தியை நாம் எடுத்துக்கொள்கின்றோம். ஆனால் வாடகை ஊர்தியினைப் போன்று இவ்வூர்தியில் ஓட்டுனர் இருக்கமாட்டார். நாம் ஊர்தியினுள் ஏறி இருக்கைகளின் அருகே காணப்படும் கணனித் தொடுதிரையினூடாக நாம் போக வேண்டிய இடம், மற்றும் பிற தகவல்களை வழங்குவதன் மூலம் எமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
குறித்தவொரு பாதை வலையமைப்பிலுள்ள (route network) அனைத்து ஊர்திகளும் அப்பாதை வலையமைப்பிற்கான மையக்கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் கணனிகள் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊர்திகளை வழிநடாத்துதல், கண்காணித்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் மையக்கட்டுப்பாட்டு நிலையத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அமைவிடம் அறியும் தொழிநுட்பத்தின் (location sensing technology) உதவியுடன் ஊர்திகளது அமைவிடங்கள் துல்லியமாகக் கணிப்பிடப்பட்டு ஊர்தி வலையமைப்பு இயக்கப்படுகின்றது.
இவ்வகை ஊர்தி மற்றும் பாதை வலையமைப்பு என்பனவற்றின் வடிவமைப்பில் ஓர்திகளின் அளவு (size) பிரதானமானதாகக் காணப்படுகின்றது. ஊர்திகளின் அளவு பெரியதாக இருக்கும்பொழுது அதிகளவான பயணிகளைக் காவிச்செல்ல முடியும் எனும்போதிலும், இவ்வகையாக வலையமைப்பொன்றில் இயங்கும் ஊரிதியின் அளவு பெரியதாகக் காணப்பட்டால் அவ்வூர்திகளுக்கான வடிவமைப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகக் காணப்படும் என்பதுடன் பாரிய ஊர்திகள் பயணிக்கவல்ல பாதை வடிவமைப்பும் அதிக பொருட்செலவானதாகவே காணப்படும். எனவே, பாதை மற்றும் ஊர்திகளின் உருவாக்க மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, இவ்வகையான வலையமைப்பில் காணப்படும் ஊர்திகள் பெரும்யாலும் 2 – 5 வரையான பயணிகளைக் காவிச்செல்ல வல்லதாக காணப்படுகின்றன.
இவ்வகை ஊர்திகள் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு வரவில்லை. இருப்பினும் பொதுப்பயன்பாட்டிற்கான பரிசோதனைக்காக, விமான நிலையங்கள், தொழில் வளாகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நினைக்கத்தெரிந்த மனமே!!!
மறதி குறித்த ஏராளமான நகைச்சுவைத்துணுக்குகள் உலகமெங்கும் உலவுகின்றன. சொல்லப்போனால், நினைவாற்றல் எவ்வளவு நமக்கு உதவுகிறதோ அதே அளவு மறதியும் நமக்கு உதவிதான். இல்லையெனில் நம் வாழ்வில் நடந்து முடிந்த துன்பகரமாக, அதிர்ச்சி தரக்கூடிய, பயங்கரமான நினைவுகள் நம்மை நாள்தோறும் துரத்திக்கொண்டுதான் இருக்கும். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையும் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழமுடிவது, சில விஷயங்களை நாம் மறக்க இயலுவதால்தான்.
ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பல செயல்களைச் செய்ய மறப்பது, தேர்வில் கேள்விக்கான விடைகளை மறந்து விடுவது, முக்கியமான தகவல்களை மறப்பது முதலியன நம் தொழில் வெற்றிக்கு மட்டுமல்லாது, சொந்த வாழ்விலும் பல சிக்கல்களை உருவாக்கிவிடக்கூடும். மறதி அனைவருக்கும் இயல்பானதுதான் என்றாலும் அதிகப்படியான மறதி அவதிக்குள்ளாக்கிவிடும். நினைவாற்றல் அதிகம் இருப்பது எப்பொழுதுமே மற்றவர்களை விட அதிக மதிப்பெண் பெறவும், அலுவலகத்தில் நன்மதிப்பு அடையவும், பொதுவாக வேலைகளைக் குறித்த காலத்தில் செய்து முடிக்கவும் உதவிகரமாக இருக்கும்.
நமது மறதியைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்த முடியுமா? முடியும்... கண்டிப்பாக முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? கத்தியைத் தீட்டாதே மனிதா புத்தியைத் தீட்டு என்று ஒரு பாடல் இருக்கிறதல்லவா? அது போல்தான்.
உடல் கட்டாக, சீராக, உறுதியாக இருக்கவேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு நினைவாற்றல் அதிகரிக்க, மூளைக்குத் தொடர்ந்து பயிற்சியளிப்பது முக்கியம். நமது மூளை அளவற்ற சக்தியினை உடையது. சராசரி மனிதர்கள் தமது மூளையின் ஆற்றலில் ஐந்து முதல் பத்து சதவீதம் மட்டுமே உபயோகிக்கின்றனர். இதுவரை அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மட்டுமே தமது மூளையின் சக்தியை அதிக அளவு பயன்படுத்தியவராகக் கருதப்படுகிறார் (பதினைந்து முதல் இருபத்தைந்து சதவீதம்). எனவே நாம் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் மூளையின் ஆற்றலும் செயல் திறனும் அதிகரிக்கிறது.
நினைவு என்பது மூளையில் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் தகவலை, மீட்டெடுக்கும் நிகழ்வு. அவ்வளவுதான். உங்கள் அலுவல் அறை அல்லது சமையல் அறையில் உள்ள பொருளை நீங்கள் எடுக்கவேண்டும் என்றால் நீங்கள் அந்த இடத்தை எப்படி திட்டமிட்டு வைத்திருக்கிறீர்கள், எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன, எவ்வளவு நாட்களுக்கு முன் வைத்தீர்கள் என்பதை எல்லாம் பொறுத்துத்தானே அதை எடுக்கத் தேவைப்படும் நேரம் கூடவோ குறையவோ செய்யும்? இதேதான் மூளைக்கும் பொருந்தும்.
நினைவாற்றலை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று - குறுகிய கால அல்லது தற்காலிக நினைவு. மற்றொன்று நீண்ட கால அல்லது நிரந்தரமான நினைவு. குறுகிய கால நினைவினை நாம் நமது கணிணியில் உள்ள 'RAM'க்கு ஒப்பிடலாம். சற்று முன் பேருந்தில் பார்த்த பெண்ணின் உடையின் நிறம், கடையில் வாங்கிய ஒரு பொருளின் விலை, சற்றுமுன் அழைத்த வாடிக்கையாளர் சொன்ன கணக்கு எண் முதலானவை இவ்வகையில் அடங்கும். தொடர்ந்து வேறு பணிகளைச் செய்கையில் இது மறந்துபோய் மற்ற தகவல்கள் உங்கள் மூளையில் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதிகப்படியாக ஏழு முதல் பத்துத் தகவல்களை மூளை தற்காலிக நினைவுப்பகுதியில் பதிந்துகொள்கிறது.
நீண்டகால நினைவுகள் என்பது நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாலோ, வேண்டுமென்றேயோ மனதில் பதித்து வைத்துக்கொள்வது. பாடங்கள், மொழி, சொற்கள், குடும்ப உறவினர் பெயர்கள், அலுவலகத்தின் செயல்பாட்டு முறைகள், திட்டங்கள் முதலியன இவற்றுள் அடங்கும். அது மட்டுமின்றி நீங்கள் புழங்கும் அல்லது சென்று வரும் இடங்கள், பழகும் பலவித மனிதர்கள், நீங்கள் பார்த்த திரைப்படம், விரும்பும் பாடல்கள் இவை அடிக்கடி உங்களால் பயன்படுத்தப் படுவதால் பொதுவாக உங்கள் நிரந்தர நினைவில் பதிந்து விடுகின்றன.
நினைவாற்றலை வளர்க்க என்ன செய்யலாம்?
ஆங்கிலத்தில் "Use it or Lose it" என்பார்கள், பயன்படுத்து அல்லது இழந்துவிடு என்பது இதன் பொருள். மூளையும் தொடர்ந்து வேலைகொடுத்துக்கொண்டே இருந்தால் அதிகக் கூர்மையாக இருக்கும். பயன்படுத்தாத ஆயுதங்களும், இயந்திரங்களும் துருப்பிடிப்பது இயல்புதானே?
பொதுவாக நாம் எதையும் மறப்பதற்குக் காரணம் நாம் அதன் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது தான். எனவே எதையாவது படிக்கையில், யாராவது பேசுகையில் நமது முழு கவனத்தையும் அதன் மீது வைப்பது அவசியம். கவனமின்மை மறதியின் நண்பன், நினைவாற்றலில் எதிரி. கூர்ந்து கவனிக்கப் பழகவேண்டுமானால் காலையில் குறைந்த பட்சமாக பத்து நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. தியானம் என்பது, கடவுளுடன் தொடர்புடையது அல்ல, நமது மனத்துடன் தொடர்புடையது. தியானம் நமது வேண்டாத சிந்தனைகளைக்குறைப்பதன் மூலம், மூளையில் நாம் சேமித்து வைத்திருக்கும் தேவையில்லாத தகவல்களைச் சுத்தம் செய்து நம் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
நீங்கள் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களை உங்களுக்கு விருப்பமான முறையில் சேமியுங்கள். சிலருக்கு எண்களை நினைவு வைத்துக்கொள்வது எளிது, சிலருக்குப் பெயர்களை நினைவில் இருத்துவது எளிது. உங்கள் தகவல்களை உங்களுக்கு எளிதான முறையில் சேமித்துக்கொள்ளுங்கள்.
அதிக அளவு வழிகளில் தகவல்களைச் சேமியுங்கள். உங்களிடம் ஒரு தகவல் தரப்படுகிறது எனக்கொள்வோம். எடுத்துக்காட்டாக, உங்கள் தோழி அல்லது நண்பர் தனது வீட்டு முகவரியைச் சொல்கிறார் எனில், அதைக் கேட்கும்பொழுதே ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள். அதை ஓரிரு முறை வாய்விட்டுப் படியுங்கள். உங்கள் கணிணியில் ஒரு கோப்பினைத் திறந்து அதைத் தட்டச்சு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் காதுகள், கண்கள் கைகள் எல்லாவற்றின் மூலமாகவும் அத்தகவல்கள் உங்கள் மூளையைச் சென்றடைவதால் அந்த முகவரியை அனேகமாக நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
ஏற்கனவே அறிந்த ஒரு தகவலுடன் இதைத் தொடர்பு படுத்துங்கள். "என் பெயர் ராகுல்." என்று ஒருவர் சொன்னால் நீங்கள் அதை கௌதம புத்தரின் மகன் ராகுலன், பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இதுபோல் தொடர்பான தகவல்களை மனதில் ஓட விட்டுக்கொண்டீர்களானால் அத்தகவலும் எளிதில் மறக்காது.
மிக முக்கியமான தகவல்கள், சூத்திரங்கள், முக்கியமான நாட்கள் இவற்றை அடிக்கடி பார்க்குமிடங்களில் எழுதி வைத்திருப்பது, உங்கள் மனதில் அவ்விஷயம் பதிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மிகவும் பெரிய, குழப்பமான தகவல்களை நினைவு வைத்துக்கொள்ள அதை பல பிரிவுகளாகப் பிரித்துப் புரிந்துகொண்டு பின் ஒன்றிணைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது, சொல்லிப்பார்ப்பது இவையும் மனதில் பதியப் பயன்படும்.
இவை அனைத்துக்கும் மேலாக, எப்பொழுதும் 'எனக்கு நினைவாற்றல் குறைவு, நான் மறந்துவிடப்போகிறேன்' என்று நினைக்கவே நினைக்காதீர்கள். உங்கள் ஆழ்மனம் நீங்கள் நினைப்பதை நடக்க வைக்கும் கற்பக மரம். கற்பக மரத்தின் அடியில் நின்று கொண்டு எனக்கு அறுசுவை உணவு வேண்டும் என்று கேட்டாலும் நடக்கும். என்னை இப்பொழுது புலி தின்றுவிடும் என்று நினைத்தாலும் நடக்கும். நமது ஆழ்மனத்தின் ஆற்றலும் அத்தகையதுதான். எனவே 'இது எனக்கு மறக்கவே மறக்காது, எனது நினைவாற்றல் மேம்பட்டு வருகிறது' என்று தன்னம்பிக்கையுடன் அடிக்கடி சொல்லி வாருங்கள். கண்டிப்பாக உங்கள் நினைவாற்றல் மேம்படுவதை உணர்வீர்கள்
இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. டில்ஷான் 110 ஓட்டங்களையும் சங்ககார 71 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் பட்டேல், ஷர்மா தலா இரு விக்கெட்டுக்களை எடுத்தனர்.
300 என்ற இலக்குடன், தனது பதில் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா, கார்த்திக், ஷேவாக் ஆகியோரை ஆரம்பத்திலேயே இழந்தது. ஷேவாக் அதிரடியாக ஆடினாலும், அநியாயமாக ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி, யுவராஜ் சிங் நிதானமாக ஆடிய போதும் அதிக பட்ச டார்கெட் அவர்களையும் அவசரப்படுத்தி ஆட்டமிழக்க செய்தது.
கேப்டன் தோனியும், சுரேஷ் ரைனாவும் இணைந்து, இந்தியாவினை சரிவில் இருந்து நிமிர்த்த முயன்றனர்.
எனினும், 29 ஓட்டங்களுடன் ராண்டிவின் பந்து வீச்சுக்கு ரைனாவும் ஆட்டமிழக்க, மறுமுனையில் தோனி மட்டும் இறுதிவரை போராடி தோற்றார்.
46.5 ஓவர்களில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களையே இந்தியா பெற்றது. தோனி அதிகூடிய ஓட்டமாக 67 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில், பெரேரா, ராந்திவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ரன்கிரி மைதானத்தில் பகலிரவு போட்டியாக இப்போட்டி நடைபெற்றது
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
Cake Orders
Thanus
thanus&vijay
Aarau Time
