Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
!-end>!-local>
Tamil HD Video Songs
!-end>!-local>
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
!-end>!-currency>
Kavalan vijay&asin
இணையதளங்கள்
!-end>!-currency>
Thiruvilayadal DVD Movie
பூமிக்கு உயிரும் நீரும் வந்தது எப்படி?.. இந்த விண் கல் சொல்லலாம்!
வாஷிங்டன்: செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் ஒரு விண் கல்லில் (Asteroid) ஏராளமான நீர் இருப்பது தெரியவந்துள்ளது.சூரியனிலிருந்து 479 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் இந்த விண் கல்லை ஹவாய் தீவில் உள்ள இன்ப்ரா ரெட் டெலஸ்கோப்கள் மூலம் ஆராய்ந்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைட் பிஸிக்ஸ் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.24 தெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண் கல்லில் நீர் மட்டுமின்றி கார்பன் மூலக்கூறுகள் உள்ளிட்ட சில உயிர் சத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.150 கிமீ அகலம் கொண்ட இந்த விண் கல்லில் 3ல் ஒரு பகுதி பனிக் கட்டியாகவே உள்ளதாகத் தெரிகிறது.சூரிய குடும்பத்துக்கு வெளியே (சரியாகச் சொன்னால் நெப்டியூன் கிரகத்தையும் தாண்டி) சுற்றும் எரி கற்களில் (comets) நீ்ர், பனிக் கட்டி இருப்பது வழக்கமானது தான். அவை சூயனுக்கு மிகத் தொலைவில் இருப்பதால் அதில் பனிக் கட்டிகள் இருப்பது வழக்கம்.ஆனால், சூரிய குடும்பத்துக்குள் இரு கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.இந்த விண்கல்லின் உள்ளே நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளதாகவும், அதை மற்ற சிறிய கற்கள் மோதும்போது ஏற்பட்ட வெடிப்பில் நீர் வெளியே கசிந்துள்ளதாகவும் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பூமிக்கு நீரும் உயிர்களும் வி்ண் கற்கள் மற்றும் எரி கற்கள் மூலம் தான் வந்திருக்க வேண்டும் என்ற தியரியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமி உருவானபோது ஏற்பட்ட பயங்கரமான வெப்பத்தில் இங்கு நீரோ, உயிர்களோ தப்பியிருக்க வாய்ப்பில்லை. இதனால் நீரும் உயிரும் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு கணிப்பாகும்.எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இந்த 24 தெமிஸ் கூட ஒரு எரி கல்லாகத் தான் இருக்க வேண்டும் என்றும், அது சூரிய குடும்பத்துக்குள் பயனித்தபோது மார்ஸ் மற்றும் ஜூபிடர் கிரகங்களுக்கு இடையிலான வட்டப் பாதையில் சி்க்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.இந்த விண் கல்லில் சூரிய ஒளி எப்படி எதிரொளிக்கிறது என்பதை இன்ப்ரா ரெட் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்தபோது நீர், கார்பன் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.சூரிய ஒளிபடும்போது இதிலுள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதாகவும், இருளில் நீர் மீண்டும் உறைந்து இந்த விண் கல்லிலேயே தேங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.ஜப்பானிய விண்கலம்...இதற்கிடையே 2005ம் ஆண்ட Itokawa விண் கல்லில் இறங்கி அதன் சாம்பிள்களை எடுத்துக் கொண்டு பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஜப்பானிய விண்கலமான ஹையாபூசா வரும் ஜூன் மாதத்தில் பூமியில் தரையிறங்கவுள்ளது. அதில் கிடைக்கும் சாம்பிள்கள் மூலம் பொதுவாக விண் கற்கள் குறித்து மேலும் பல விவரங்கள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்
மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.
படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணணி செய்தி Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.
குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்
Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.
hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.
recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.
temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.
laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.
laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.
தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.
அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.
ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.
குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்
Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.
hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.
recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.
temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.
laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.
laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.
தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.
அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.
ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
நட்புக்கு ஓர் விளக்கம்...
நட்புக்கு ஓர் விளக்கம்...
சோகங்கள் எத்தனை
அத்தனையும் அன்பாய்
பகிர்வாய் உன் நட்பிடம்.......
பார்த்த நாட்கள் எத்தனை
பழகிய நாட்கள் எத்தனை
அதுவரை சொல்லிடுவாய்
உன் அத்தனை சுயசரிதயும்....
காண முடியா தூரங்கள் கண்டே
இல்லா உறவுகள் உன்னை விட
நேசிப்பாய் உன்மையான நட்பைஓரிரு நாட்களில்...
உனக்காய் உயர்வொன்றை
உணரமாட்டாய் உன் நட்பின்
உயர்வுக்கு ஒளியாய் இருப்பாய்......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
!-end>!-currency>
Cake Orders
!-end>!-weather>
Thanus
!-end>!-my>