Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
Blog Archive
Tamil HD Video Songs
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
Kavalan vijay&asin
இணையதளங்கள்
Thiruvilayadal DVD Movie
Happy new year 2011
Happy new year !!! All languages to all my friends
ஆழிப்பேரலையில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் நினைவுகூர்ந்து எமது கண்ணீர் அஞ்சலிகள்
அழகிய உணவே!
முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!
1. வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சை பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமைடன் திகழும்!
2. உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்தும் ஹை டென்ஸிட்டி லைப்போபுரோட்டீன் (ஹெச். டி. எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரபசைடன் மின்னிபிரகாசிக்கச் செய்யும்!
3. ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரபசைடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.
4. நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுபடைவீர்கள்!
5. கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட்இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.
6. வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவு பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!
உடல் ஆரோக்கியத்துக்கு 10 கட்டளைகள்.
முக்கியமான 10 வழிகளை பின்பற்ற வேண்டும். அவை:
1. உடல் எடை நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். எந்த வயதிலும், உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண் தான் இது. உதாரணமாக, 80 கிலோ / 2 மீட்டர் x 2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். உடல் நிறை குறியீட்டெண் அளவு 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும். அதே சமயம், உடல் எடையை பராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, “மாடல்’ அழகியாக விரும்புவது, உண்மையில் ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏற்படும்.
சரிவிகித உணவு உண்ணாமல் போவது, உணவு குறித்த அர்த்தமற்ற பிரமை ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும். உணவு முறையில் மாற்றம் செய்து சாப்பிடத் துவங்கினால், உடல் எடை கூடி விடும். இதற்கு பின்னணியாக இருக்கும் நோயை கண்டறிந்து, அதை சரி செய்த பின்னரே, உடல் எடை மீது கவனத்தில் கொள்ள முடியும். தைராய்டு பிரச்னை, நீரிழிவு நோய், அதிக உணவு சாப்பிடும் போக்கு, உணவில் உள்ள சத்துக்கள் சரி விகிதத்தில் உறிஞ்சப்படாமை, புற்றுநோய் அல்லது வேறு நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்த பிறகு, உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும். அப்போது தான் உடல் எடை சீராகும். உடலுக்கு தேவையான கலோரி அளவு கொண்ட உணவு சாப்பிட்டால், உடல் எடை எப்போதும் சீராகவே இருக்கும். தினசரி கலோரி அளவு, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 20 கலோரி என்ற கணக்கில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். உடல் எடை சீராக இருக்க, ஒரு கிலோவுக்கு 30 கலோரி அளவு என்ற கணக்கும், உடல் எடை அதிகரிக்க, ஒரு கிலோவுக்கு 40 கலோரி அளவு உணவும் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு மாறுபடலாம்.
2. இதய நோய் இப்போதெல்லாம், 30 வயதிலேயே இதய நோய் தாக்க துவங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் வரை, இந்த நோயிலிருந்து தப்பித்து விடுவர். அதன் பின், ஆண்களை போலவே நோய் உண்டாகி விடுகிறது. புகை பிடிக்காமல், புகை பிடிப்பவர்களின் அருகில் நிற்காமல் இருந்தால், இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டால், படபடப்பு குறையும்.
3. சரிவிகித உணவு சரிவிகித உணவு என்பது, அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்சத்து அடங்கிய உணவுகள், அசைவமாக இருந்தால், மீன் ஆகியவை சாப்பிடுவது தான். பூரிதக் கொழுப்பு, அதிக உப்பு ஆகியவை அடங்கிய ரெடிமேடு உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றில் அளவுக்கு அதிகமாக கலோரிகள் இருக்கும்.
4. உடற்பயிற்சி ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சியோ, நடை பயிற்சியோ, நீச்சலோ மேற்கொள்ளலாம். தினமும் 20 நிமிட தியானம், யோகா ஆகியவை மேற்கொள்ளலாம்.
5. புற்றுநோய் தவிர்ப்பு புற்றுநோயை தவிர்ப்பது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது ஆகியவை, வாழ்நாளை அதிகரிக்கும். சரியான உடல் எடை, சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, புகை பிடிக்காமை, ஓரளவு மட்டுமே மது அருந்துதல் ஆகியவை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஹெப்பாடைட்டிஸ் பி வைரசுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், கல்லீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பப் பை வாய் புற்றுநோயைத் தடுக்க, எச்.பி.வி., தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம். “பாப் ஸ்மியர்’ பரிசோதனை, மார்பக சுய பரிசோதனை, மேமோகிராபி ஆகியவை, மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும். கோலோனோஸ்கோபி மற்றும் “ப்ராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென்’ ஆகியவை, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள்.
6. காயங்களை தவிர்த்தல் இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் உயிரிழப்புகள், விபத்தால் ஏற்படுகின்றன. 12 லட்சம் பேர், படுகாயம் அடைகின்றனர்; மூன்று லட்சம் பேருக்கு, விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவரும், ஹெல்மெட் அணிந்தால், விபத்து ஏற்படும் போது, காயமின்றி தப்பிக்கலாம். ஒரு வாகனத்தில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிச் செல்லவே கூடாது. கார் பயணத்தின் போது, “சீட் பெல்ட்’ அணிவது கட்டாயம். சிலர், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மட்டும், “சீட் பெல்ட்’ அணிகின்றனர்; இது தவறு. குறைந்த தூரத்தில் செல்லும் போது கூட, “சீட் பெல்ட்’ அணிய வேண்டும். வீடுகளில், வழுக்கு தரை, படிகள், குளியலறைகள் ஆகியவற்றில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தி, கைப்பிடிகளும் வைத்தால், இந்த நிலையை தவிர்க்கலாம். கழிவறைகளில் போதுமான அளவு கைப்பிடிகள் வைத்தால், முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
7. முழு உடல் பரிசோதனை உயரம், எடை, ரத்த பரிசோதனை, இருதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை குறித்து, ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண், பல் ஆகியவற்றுக்கும் ஆண்டுதோறும் பரிசோதனை தேவை. பரிசோதனைக் கூடங்கள் நடத்தும் மருத்துவ முகாமில், அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தேவையில்லை. வேண்டாத பரிசோதனைகளை செய்வது, அதிகச் செலவை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை குறித்த பரிசோதனை, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
8. தீவிர நோய் நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர பாதிப்பு கொண்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டையும், மருந்து உட்கொள்வதையும், மிகச்சரியாக பின்பற்ற வேண்டும். டாக்டர்கள் குறித்து கொடுத்த நாட்களில், நேரில் சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முறையாக கையாளும் நோயாளிகள், பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. நோய் தடுப்பு மருந்துகள் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில், குளிர்க்காய்ச்சலைத் தவிர்க்கும் ஊசிகளை, முதியோர் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த ஆண்டுகளில் ஏற்படும் குளிர் காய்ச்சலை தடுக்க இந்த மருந்து உதவும். வேகமாகப் பரவும் நோய்கள் ஏதும் இருந்தால், அதற்கான தடுப்பு ஊசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும். 65 வயது நிரம்பியவர்கள், “நியூமோகாக்கல்’ தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு முறை போடப்பட வேண்டிய ஊசி இது.
10. ஊட்டச்சத்து மாத்திரைகள் முதியோருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 1,200 மி.லி., கிராம் அளவுக்கு கால்சியம் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும். டானிக்குகளோ, புரோட்டீன் சப்ளிமென்ட்டுகளோ தேவையில்லை.
கிழங்குகளும் அதன் குணங்களும்
கொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள் .
தீபாவளி என்றால் என்ன?
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நன்மைகளின் திரு நாள்…………. உறவுகளின் ஒரு நாள்……….. சந்தோசத்தின் மழை நாள்…….. இன்பத்தின் சாரல்கள் பொழியும் பொது நாள்………… இனிமைகளின் மொட்டுக்கள் மலரும் நறுமண நாள்…………
இன்று போல் என்றும்……………
நன்மைகள் சிறக்கட்டும்…………..
வன்மைகள் பெருகட்டும்…………
துயரங்கள் விலகட்டும்…
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். தனுஸ்
உள்ளங்கையில் உலகம் - கைப்பேசியில் இணையம்
தொழில்நுட்பம் வளர வளர, நம் "தேவை"களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் "வசதி உள்ளவர்கள்" வாங்கும் பொருட்களாக இல்லாமல், " அத்யாவசியம்" என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் 'நாம் வாழும் இந்த' காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் – கைப்பேசியும் இல்லாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்டால், நாம் அதாவது தனிநபரான நீங்களும் நானும் அந்த வட்டத்துக்குள் இல்லை என்ற எண்ணம் தான் எழுகிறது.
10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் Necessary Evil என்று சொல்லவது இணையத்தொடர்புக்கு மிகச்சரியாக பொருந்தும். தகவல் பரிமாற்ற துறையில் இருப்பவர்கள் இதன் வீர்யத்தை நன்கு அறிவார்கள். இது ஒரு புறம் இருக்க, இணையத்தொடர்பை நிறுவுவது முன்பை விட இன்று மலிவாகத் தான் உள்ளது. நாளுக்கு நாள் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணமாக்கூட இருக்கலாம்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களில் கணனியும் கைப்பேசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒன்று இல்லை என்றாலும், பல அலுவல்கள் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். இம்மாதிரி நேரங்களில் தான் கைப்பேசியில் இணையதளங்களை பார்வையிடுவதைக் குறித்து பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது நடைமுறைக்கு சரிவருமா? அப்படியானால் 'என் கைப்பேசியில் இதை எவ்வாறு பயன்பாட்டு நிலையில் வைப்பது" போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் இப்பதிவின் நோக்கம்.
கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நாம் ISP என்று சொல்லப்படும் Internet Service Provider களை கண்டறிந்து சந்தா விவரங்களை தெரிந்துகொள்வோம். உதா:- DataOne, BSNL, Sify போன்றவை. பிறகு இவற்றில் நமக்கு உகந்ததை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட ISP அலுவலகத்தில் விண்ணப்பத்தை குடுத்து, சந்தா தொகையையும் கட்டிவிட்டால், சில தினங்களில் கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, "என்னிடம் Wireless Modem உள்ளது. இதை பயன்படுத்திதான் நான் மடிகணனியில் இணையத்தொடர்பு ஏற்படுத்துகிறேன். ஆகவே, இதே wireless modem த்தை பயன்படுத்தி என் கைப்பேசியிலிருது இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா?" என்றால் கண்டிப்பாக முடியாது. Modem தான் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் மூலாதாரம் என்றாலும், கணனி வேறு, கைப்பேசி வேறு. Chalk peice பயன்படுத்தி Slate இல் எழுதலாம், நோட்டுப்புத்தகத்தில் எழுத முடியுமா? நோட்டுபுத்தகத்தில் எழுத பேனா / பென்சில் தான் உகந்தது. கணனியில் பயன்படுத்தும் இணையத்திற்கும், கைப்பேசியில் பயன்படுத்தும் இணையத்திற்கும் இது தான் வித்தியாசம்.
அப்படி என்றால், கைப்பேசியில் எவ்வாறு இணையத்தொடர்பை ஏற்படுத்துவது?. இதற்கான குறிப்புகள் சில.
- Mobile phone model : - நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில, இணைய பயன்பாட்டுக்கான சாதனங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுக்கள். உதா:- கைப்பேசியில் உலாவி / கோப்புகளை படிக்கவும் மற்றும் தரவிறக்கம் – வலையேற்றுவதற்கான வசதி போன்றவை.
- Mobile Service Provider :- நீங்கள் சந்தாதாரராக இருக்கும் Mobile Service Provider (Airtel, Hutch, vodafone) இடம், கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதா என்று விவரமாக கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், நேரில் போய் விசாரிப்பது நல்லது. பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
- சந்தா விவரங்கள் அடுத்தது, இணையத்தொடர்புக்கான தனிப்பட்ட சந்தா விவரங்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். சில Mobile Service providers, மாதம்/ வாரம் / தினத்திற்கென்று ஒரு தொகை வைத்திருப்பார்கள். நீங்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். வேறு சில Mobile Service Providers, பயன்பாட்டுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதும் போன்ற திட்டங்களையும் வைத்திருப்பார்கள். ஆகவே அவசரப்படாமல், நிதானமாக எல்லாவற்றையும் கேட்டு, புரிந்துக கொண்டு உங்களுக்கு சரியாக தோன்றும் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
- Data Download Charges :-
கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்த மாத சந்தா என்ற தொகையை கட்டினாலும், இணையப்பயன்பாட்டில் இருக்கும் பொழுது, உலாவியில் தரவிறக்கப்படும் பக்கங்களின் அளவை சார்ந்திருக்கும் தொகையை தான் Data Download charges என்று சொல்வார்கள்.
உதா:- உங்கள் கைப்பேசியில் இணையத்தொடர்புக்கான மாதச்சந்தா 500/- என்று வைத்துக்கொள்வோம். இணையத்தொடர்பு தான் கிடைத்துவிட்டதே! சும்மா இருக்கும் நேரம் எல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறேன், வலைத்தளங்களை பார்வையிடுகிறேன் என்று தினம் 2-3 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 மணி நேரத்தில், நீங்கள் பார்வையிட்டிருக்கும் பக்கங்களின் அளவை பொறுத்து Data Download Charges என்றொரு தொகை கணக்கிடப்படும். மாத கடைசியில் இணயத்தொடர்பு சந்தா 500/ மற்றும் Data Download Chareges 1000/- என்றும் பில் வரும்.ஆகவே நீங்கள் தேர்வு செய்திருக்கும் Mobile Service provider இடம், அவர்களின் திட்டத்தில் data download charges உண்டா? அப்படி உண்டு என்றால் அதன் விவரங்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் இணையத்திலிருந்து பாட்டு / படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த Data Download Charges கூரையை தொடும் அளவிற்கு இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
இவை அனைத்தையும் மனதில் பதியவைத்து உங்கள் Mobile Service Provider ஐ அணுகி விவரங்கள் சேகரித்து நன்கு ஆராய்ந்த பிறகே கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்பதையே பரிந்துரைக்கிறோம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியும். "கைப்பேசியில் இணையம் தேவை தானா?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும். இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிட துவங்குங்கள், விடை தானாகவே கிடைத்துவிடும்.
உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
தனிநபர் தன்னியக்க போக்குவரத்து ஊர்தி
நவீன உலகிலே ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்குமே எதிர்நோக்கும் பொதுப்பிரச்சினையாகும். தனிநபர் போக்குவரத்து வாகனங்களின் சடுதியான அதிகரிப்பே இப் போக்குவரத்து நெரிசலுக்கான பிரதான காரணமாகக் காணப்படுகின்றது.
பொதுவாக, மக்கள் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காகவே தனிப் போக்குவரத்து ஊர்திகளை விரும்புகின்ற போதிலும் தனிப் போக்குவரத்து ஊர்திகளின் அதிகரித்த பாவனை போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கின்றது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எச்சரிக்கும் போக்குவரத்துத்துறை நிபுணர்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக புதிய உத்திகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது பரவலாகப் பயன்பாட்டிலிருக்கும் பொரும்பாலான பொது மற்றும் தனிநபர் போக்குவரத்து ஊர்திகள் யாவும் பொதுவான ஒரே போக்குவரத்துப் பாதைகளையோ அல்லதுஒன்றுக்கொன்று தொடுகையுறும் போக்குவரத்துக் கடவைகளையோதான் பயன்படுத்துகின்றன. இவ்வாறான காரணங்களால் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து தடை கூட ஏற்படுகின்றது. இவற்றுக்கான தீர்வுகளிளாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் ஏனைய போக்குவரத்துப் பாதைகளுடன் தொடுகையுறாது தனியான போக்குவரத்துப் பாதைகளுடன் உருவாக்கப்படும் PRT என்றழைக்கப்படும் தனிநபர் தன்னியக்கப் போக்குவரத்து ஊர்தி வலையமைப்பாகும்.
இவ்வகை ஊர்திகளின் சிறப்பம்சம் இவை தனியான பிரத்தியேகப் பாதை வலையமைப்பினூடாக இயக்கப்படுவதுடன் ஒருவழிப்பாதையில் பயணிப்பதன் காரணமாக ஏனைய ஊர்திகளின் குறுக்கீடின்றி வேகமாகப் பயணிக்கவல்லன. அதுமட்டுமன்றி இவற்றின் பயன்பாடு பெருமளவான வாகனத் தரிப்பிடத் தேவையை இல்லாது செய்கின்றது. முற்றுமுழுதாக கணனிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வூர்திகள் மின்சக்தியில் இயங்கவல்லன. இவ்வகையான போக்குவரத்து வலையமைப்பிற்கான ஆய்வு முயற்சிகள் 1960 களிலேயே ஆரம்பித்து விட்டன என்ற போதிலும், தொழிநுட்ப முன்னேற்றமின்மை மற்றும் தனியான பாதைகள் அமைப்பதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதில் பெரும்பாலானோர் மத்தியில் தயக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது காணப்படும் அபரிதமான தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெர்சலைத் தவிர்ப்பதற்கு அவசியமாகக் தேவைப்படும் மாற்றீடு என்பன இவ்வூர்தி தொடர்பான ஆய்வுகளை மீண்டும் முடுக்கி விட்டுள்ளன.
இவ்வகை ஊர்திகளின் சேவை அடிப்படையில் வாடகை ஊர்திகளின் (Taxi) சேவையினை ஒத்ததாகவே காணப்படுகின்றது. வாடகை ஊர்தி ஒன்று எமக்குத் தேவைப்படும்போது, வாடகை ஊர்திக்கான தரிப்பிடத்திலிருந்தோ அல்லது வாடகை ஊர்தி சேவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டோ நாம் எனக்கான ஊர்தியை அழைக்கின்றோம். இங்கும் அதேபோன்று இத் தன்னியக்க ஊர்திகள் நிறுத்தப்படும் தரிப்பிடத்திலிருந்து அமக்கான ஊர்தியை நாம் எடுத்துக்கொள்கின்றோம். ஆனால் வாடகை ஊர்தியினைப் போன்று இவ்வூர்தியில் ஓட்டுனர் இருக்கமாட்டார். நாம் ஊர்தியினுள் ஏறி இருக்கைகளின் அருகே காணப்படும் கணனித் தொடுதிரையினூடாக நாம் போக வேண்டிய இடம், மற்றும் பிற தகவல்களை வழங்குவதன் மூலம் எமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
குறித்தவொரு பாதை வலையமைப்பிலுள்ள (route network) அனைத்து ஊர்திகளும் அப்பாதை வலையமைப்பிற்கான மையக்கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் கணனிகள் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊர்திகளை வழிநடாத்துதல், கண்காணித்தல் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் மையக்கட்டுப்பாட்டு நிலையத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அமைவிடம் அறியும் தொழிநுட்பத்தின் (location sensing technology) உதவியுடன் ஊர்திகளது அமைவிடங்கள் துல்லியமாகக் கணிப்பிடப்பட்டு ஊர்தி வலையமைப்பு இயக்கப்படுகின்றது.
இவ்வகை ஊர்தி மற்றும் பாதை வலையமைப்பு என்பனவற்றின் வடிவமைப்பில் ஓர்திகளின் அளவு (size) பிரதானமானதாகக் காணப்படுகின்றது. ஊர்திகளின் அளவு பெரியதாக இருக்கும்பொழுது அதிகளவான பயணிகளைக் காவிச்செல்ல முடியும் எனும்போதிலும், இவ்வகையாக வலையமைப்பொன்றில் இயங்கும் ஊரிதியின் அளவு பெரியதாகக் காணப்பட்டால் அவ்வூர்திகளுக்கான வடிவமைப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகக் காணப்படும் என்பதுடன் பாரிய ஊர்திகள் பயணிக்கவல்ல பாதை வடிவமைப்பும் அதிக பொருட்செலவானதாகவே காணப்படும். எனவே, பாதை மற்றும் ஊர்திகளின் உருவாக்க மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, இவ்வகையான வலையமைப்பில் காணப்படும் ஊர்திகள் பெரும்யாலும் 2 – 5 வரையான பயணிகளைக் காவிச்செல்ல வல்லதாக காணப்படுகின்றன.
இவ்வகை ஊர்திகள் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு வரவில்லை. இருப்பினும் பொதுப்பயன்பாட்டிற்கான பரிசோதனைக்காக, விமான நிலையங்கள், தொழில் வளாகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நினைக்கத்தெரிந்த மனமே!!!
இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. டில்ஷான் 110 ஓட்டங்களையும் சங்ககார 71 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் பட்டேல், ஷர்மா தலா இரு விக்கெட்டுக்களை எடுத்தனர்.
300 என்ற இலக்குடன், தனது பதில் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா, கார்த்திக், ஷேவாக் ஆகியோரை ஆரம்பத்திலேயே இழந்தது. ஷேவாக் அதிரடியாக ஆடினாலும், அநியாயமாக ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி, யுவராஜ் சிங் நிதானமாக ஆடிய போதும் அதிக பட்ச டார்கெட் அவர்களையும் அவசரப்படுத்தி ஆட்டமிழக்க செய்தது.
கேப்டன் தோனியும், சுரேஷ் ரைனாவும் இணைந்து, இந்தியாவினை சரிவில் இருந்து நிமிர்த்த முயன்றனர்.
எனினும், 29 ஓட்டங்களுடன் ராண்டிவின் பந்து வீச்சுக்கு ரைனாவும் ஆட்டமிழக்க, மறுமுனையில் தோனி மட்டும் இறுதிவரை போராடி தோற்றார்.
46.5 ஓவர்களில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களையே இந்தியா பெற்றது. தோனி அதிகூடிய ஓட்டமாக 67 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில், பெரேரா, ராந்திவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ரன்கிரி மைதானத்தில் பகலிரவு போட்டியாக இப்போட்டி நடைபெற்றது
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா எப்படி ?
ஒரு ஈ காக்கா இருக்காது ஏனென்றல் டிக்கட் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் நுழையலாம் ,,ஆகையால் பிளாட்பார்மில் கூட்டமோ மோதலோ நெரிசலோ கிடையாது அப்படியே மிகச் சுத்தமாகத் தரை இருக்கிறது தவிர அந்த இரயிலில் எல்லா வசதியும் உண்டு டாய்லெட்டில் ஷேவ் செய்யவும் வசதி உண்டு ஏரோப்பிளேன் பறப்பது போன்று தோன்றுகிறது அத்தனை வேகம் ஆனால் உடம்பில் ஒரு குலுங்கலும் இருப்பதில்லை , ஐரோப்பாவுக்குப் போக செங்கன் விசா எடுக்கவேண்டும் இதில் பல உள்நாட்டிற்குப் போக முடியும் ஆனால் சுவிட்சர்லாந்து போக ஒரு தனி விசா எடுக்க வேண்டும் நாங்களும் அதுபோல் எடுத்து அங்குப் போய் சேர்ந்தோம்,
ஆனால் வெள்யில் வர ஒரு மணிக்கு மேல் ஆகி விட்டது அத்தனைப் பரிசோதனை,ரொம்பக் கண்டிப்பாக இருக்கும் பரிசோதகர்கள் எல்லோரையுமே ஒரு சந்தேகக் கண்களுடன் பார்க்கிறார்கள் ஒருவர் டிக்கட் காட்டும் போது பின்னால் இருப்பவர் சுமார் ஐந்து கெஜம் தள்ளி நிற்பார் தவிர உள்ளே நுழையும் இடம் கோயிலில் கியூ வரிசையில் நிற்க ஒரு ஆள் நுழையும்படி கயிறு கட்டி இருப்பது போல் இங்கும் ஸ்டீலில் இருகிறது எப்படியோ எல்லாம் தாண்டி வெளியே வந்தோம் பின் நேராக எங்கள் நண்பர் வீடு போனோம் போகும் இடமெல்லாம் ஒரே பசுமை ஆஹா என்ன அழகு இயற்கைக் கொஞ்சுகிறது அங்கே ,பளிங்குப் போன்ற ஏரிகளின் நீர் ஆட்டங்கள் பசும் புல் வெளிகளில் கோல்ப்f ஆட்டம் golf ஒடும் நதிகள் இயற்கையோடு அதைச் சேதப்படுத்தாத நவீனமும் சேர சுற்றுலா மிக்வும் இனிக்கிறது
மறுநாள் நாங்கள் ஐக்கியநாடுகளின் தலைமை அலுவகம் பார்த்தோம் The league of united nations} உள்ளே போகப் பாஸ் நுழைவுச்சீட்டு வாங்கி இருந்தமையால் உள்ளே போய் ஒலிப்பெருக்கில் பேசியும் பார்த்தேன் அந்த இருக்கையிலும் அமர்ந்தேன் அதற்குள் எந்தத்தேசத்தின் மெம்பர் நீ ? என்று என் கணவர் கிண்டலடித்தார் இங்கு இருக்கும் வங்கி மிகப் பெயர் போனது பல பெரிய புள்ளிகளுக்குச் சேமிப்பு இங்கு அவசியம் இருக்கும் இதன் தலை நகரம் போர்ன் Berne ஆரம்பத்தில் இப்பகுதி பர்ச்சோல்டு என்ற அரசர் ராணுவத் தளமாக ஆக்கிக் கொள்ள பின் இதுவே தலை நகரம் ஆகிவிட்டது நாங்கள் வரும் போது சிலப் பொது இடங்களில் மலை அடிவாரத்தில் சிலர்
நமது நாதஸ்வரம் போன்ற ஒன்றை வைத்து அழகாக இசைக்கின்றனர்.அது அவர்களது தேசிய வாத்தியமாம் பெயர் அல்ப்ஹோர்ன் Alphorn அது பின்னால் வளைந்து ஒரு 2 மீட்டருக்கும் மேல் நோக்கி வளைந்திருக்கிறதுமலை அடிவாரத்தைப் பார்த்தோமானால் இயற்கையில் மேலே நீலவனம் கீழே தெளிந்த நீரூற்று அதில் மோதி வந்து நம்மை அணைக்கும் தென்றல் அத்துடன் அந்த இசை நம் சுவாசத்தைத் தழுவி நம்மையும் தழுவிச் செல்கிறது சுற்றிலும் இருக்கும் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள்,,,, அதில் பனி மூடி அந்த மலை அரசன் வெள்ளி முகுடம் தறித்தாற்போல் ஜ்வலிக்கிறான் இங்கு நாலு மொழிகள் பேசப்படுகின்றன அவைகள் ஜெர்மன் பிரஞ்சு இத்தாலி உரோமன்ஸ்
நாங்க்ள் பேசில் என்ற ஊருக்கு போயிருந்தோம் போகும் இடமெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கி எங்களை வரவேற்றன சுகந்தம் தழுவியத் தென்றல் எங்களைத் தழுவிச் சென்றன டிராம்கள் ஊர்ந்து போகின்றன எங்குத் திரும்பினாலும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் நம்முடன் வருகின்றன இங்கு இருக்கும் ஒரு பழமையான பல்கலைக் கழகம் பார்த்தேன் 1460ல் கட்டப்பட்டது என்றார்கள் இன்றும் மிகப் பொலிவுடன் இருக்கிறது பலவிதமான கடைகளும் உண்டு
அதில் எல்லாம் பழங்காலக் கலைப் பொருட்களே antiques விற்கப்படுகின்றன நான் போன நேரம் ஹோலிப் பண்டிகை இந்தியாவில் இருந்தது ஆனால் அங்கும் எல்லா இந்தியர்களும் சேர்ந்து ஹோலியும் கொண்டாடினர் பலவிதமான போட்டிகளுடன் பரிசுகளும் கொடுக்கப்பட்டன,அங்கு ஒரு தமிழ்ச் சங்கமும் உண்டு ஆனால் நான் பார்க்க முடியவில்லை அன்று ரெஸ்ட் எடுத்தோம்அந்த நேரம் என் நண்பர் குடும்பத்துடன் ஒரு இரண்டு மணி நேரம் வெளியில் போனார்.நான் மட்டும் வீட்டில் இருந்தேன் அப்போது ஒரு பிரஞ்சு பெண்மணி காரில் வந்தாள் படகு போல் பெரிய கார் வீடுவந்து மணி அடித்தாள் நான் திறந்தவுடன் " மெர்ஸி பெக்கு"என்று சொல்லி வேகமாக உள்ளே போனாள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவள் பின்னாடியே போனேன் அவ்ள் தன் உடுப்பைக்க்கழட்டி வேறு போட்டுக்கொண்டு ஒரு ஏப்ரான் என்றுச் சொல்லப்படும் ஒரு மேல் அங்கியைச் சுற்றிக் கொண்டு டாய்லெட்
போனாள் நான் என் நண்பருக்கு போன் செய்து கேட்டேன் அவர் அதற்கு வந்தவள் டாய்லெட் அலம்புவள் கவலை வேண்டாம் " என்றார் அப்பாடி அவள் அணிந்த உடையும் மேக்கப்பும் வந்த காரும் அப்ப்டியே என்னை மயக்க வைத்தது அவள் சம்பாத்தியம் மிக அதிகம் தான் மறு நாள் நாங்கள் சாஷலீஸே என்ற மிகப்பழையகாலத்துக் கோட்டையும் பார்த்தோம் பின் தான் எங்களது முக்கிய கட்டமான ஆல்ப்ப்ஸ் பனிமலை மீது உலவி வந்த நாள் "வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம் என்று பாரதியார்
பாடியது ஞாபகம் வந்தது பிரயன்ஸ் Brienz ,,, thun துன் என்ற இரு ஏரிகளுக்கிடையேஅமைந்த ஆல்ப்ஸ் சிகரங்களான மான்ச் எய்கர் , ஜுங்க்ப்ரோ Mounch, eiger, Jung frou சிகரங்களுக்குப் பிரயாணம் துவங்கியது ஜுங்க்பிரோ ரயில் நிலையம் ஐரோப்பாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் இரயில் நிலையம் ஹோட்டல் விலை மிக அதிகமானதால் வீட்டிலிருந்து தோசை மிளகாய்ப்பொடியுடன் ,எலுமிச்சம்பழ சாதம் கட்டிக்கொண்டு போனோம் தண்ணீர் கோகோகோலா போன்றது வாங்க சுமார் முன்னூரு ரூபாய் சிலவு செய்ய வேண்டும் 3454அடி உயரம் ரயில் போகிறது ஊட்டி போகும் இரயில் போல் உள்ளது இரயில் மலையைச் சுற்றி வளைந்து வளைந்துபோகிறது எல்லோருடைய கைகளிலும் கேமரா பைனாகுலர் இருந்தன
ஒரு ஆயிரம் அடி ஏறியவுடனேயே எனக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது இருந்தாலும் மேலே போய் பார்க்கும் ஆசை விடவில்லை அப்புறம் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாதே ஆகையால் துணிந்து மேலே சென்றேன் அங்கு நடுவே ஸ்டேஷனின் இறங்கி இயற்கையை ரசித்து பிறகு திருமபவும் இன்னொரு இரயிலில் ஏறிக்கொள்ளலாம் நங்களும் ஒருஇடத்தில் இறங்கி எங்கள் தோசையை ஒரு பிடி பிடித்தோம் நாங்கள் ஒரு புகை அல்லது மேக மண்டலத்தின் நடுவில் இருந்தோம் ஹனிமூன் தம்பதிகள் பனிமூன் தம்பதியாக மாறி பனியில் சறுக்கி விளையாடித் தன்னை மறந்தனர் சிலர் பந்துப்போல் பனியை அடித்து விளையாடினர்எங்குப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் புதுமணத் தமபதிகள் போல் வாழ்க்கை ரசித்து வாழ்வதற்கே என்பதை நிரூபித்தனர் முத்தம் கொடுப்பது சர்வ சகஜம்
எல்லோரும் காமக் கேளிக்கையில் ஈடுபடுவதால் வெடகமோ அல்லது ஒரு கூச்சமோ இருப்பதில்லை சாரட் குதிரை வண்டி நமக்கு மெல்ல ஊர்ந்து ஊரின் அழகைக் காட்டுகிறது சாவனீர் கடைகளும் பலவித உலோகங்கள் பலதரப்பட்ட மணிகள் விற்கின்றன மாலை ஒரு 6 மணிக்குள் இரயில் கீழே வந்து விடுகிறது பனி சறுக்கல் விளையாட்டு ஆண்டு முழுதும் உண்டு ஸ்கில்தாரின் என்ற மலையில் பிஸ்கிளோரியா piz gloria என்ற சுழலும் ரெஸ்டரான் உண்டு தவவர டிட்லிஸ் ரோட் ஏர் Titlis Rotair என்ற சுழலும் லிப்டும் உண்டு அதன் கண்ணாடிச்சுவர் வழியே ஆல்ப்ஸ் பனிசரிவு மலைத்தொடர்கள் உருகும் பனி என்ற பல ரசிக்கலாம் அங்கு பனியாலேயே ஒரு குகையும் செதுக்கி இருக்கிறார்கள் சிறுவர்கள் சிறுமிகள் சிவந்த முகத்துடன் தங்கமுடியுடன் ஆப்பிள் கன்னத்துடன் அழகாக் நம்மை வ்சீகரிக்கின்றன்ர் முதுகில் கட்டியத் தொட்டிலில் குழந்தையுடன் தாயும் வருகிறாள் இங்கு வந்தால் இங்குக் கிடைக்கும் சாக்கலேட்டுகளைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது நாங்கள் பல டப்பாக்கள் வாங்கினோம் பிரஞ்சு மொழியில் எழுதிய ஒரு டப்பாவைத் திறந்து ஒரு பெரிய சாக்கலேட்டைத் தின்னேன் அரம்பத்தில் அருமை ஆனால் போகப்போக ஒரு விசித்தரமான மணமும் கசப்பும்
வந்தது கூட வாந்தியும் வந்தது என்னடா என்று பார்த்தால் அதற்குள் விஸ்கி இருந்தது அத்துடன் ரம் ஜின் என்று பல ரகம் வைப்பார்களாம் ஆனால் மற்ற சாக்கலேட் சுவையோ அருமை எல்லா பொருளும் உள்ளே வைக்கிறார்கள் ,ஸ்விஸ் கடிகாரமும் மிகவும் பெயர் போனது இரத்தினம் ,முத்து பிளாட்டினம் என்று பலவகைகளில் செய்யப்பட்டு நம்மை ஈர்க்கின்றன பல ஆயிரங்களுக்கு கடிகாரம் இருகின்றன அதை வாங்குபவர்களும் இருக்கின்றனர் லண்டனில் மெழுகு பொம்மைக் கூடம் மிகப் பெயர் பெற்றது அந்த மெழுகு பொம்மையைக் கண்டுப்பிடித்தப் பெண்மணிமேடம் துஸ்ஸட் இந்த நாட்டவர்தான். அதேபோல் 1864ல் சுவட்சர்லாந்தில்தான் முதன் முதலில் போர்களின் நாசம் பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் எண்ணமும் உருவானது இதன் பலன் தான் டெட் கிராஸ் சொசைட்டி இதன் தலைமை அலுவலகம் ஜெனீவாவில் உள்ளது. இந்தத் டூரில் பல ஆயிரங்கள் சிலவு ஆனாலும் மனம் நிறைகிறது .